இதனால் தான் நயன்தாரா புதிய படங்களை ஒப்புக்கொள்வதில்லை..! – பகீர் கிளப்பிய பயில்வான்..!

நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனரும் அவரது காதலருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடித்த கையோடு தேன்நிலவு கொண்டாடி தற்போது தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர்.

சமீபத்தில் துபாயில் விக்னேஷ் அவரின் பிறந்த நாளை கொண்டாடினர். இதனை தொடர்ந்து இப்படி ஒரு மனைவி கிடைக்க துணையாக இருந்த கடவுளுக்கு நன்றி என்று கூறி இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய நடிகரும், பத்திரிகையாருமான பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

குழந்தை பெற்றுக் கொள்ள நடிகை நயன்தாரா விரும்புகிறாராம். இதுகுறித்து மருத்துவரை அணுகி இருக்கிறார். இதனை கேட்ட மருத்துவர்கள் நயன்தாராவின் உடலை பரிசோதித்துவிட்டு 9 மாதங்கள் நீங்கள் மருத்துவர்களின் சொல் படி இருக்க வேண்டும்.

நாங்கள் சொல்லக்கூடிய உடற்பயிற்சிகள் மற்றும் உணவுகளை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

அதனால்தான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார். மேலும் ஒரு பெண்ணானவள் தாயாகும் போது தான் அவருடைய வாழ்க்கை முழுமை அடைகிறது. தாயாக வேண்டும் என்பது பெண்களுக்கு ஏற்படக்கூடிய இயல்பான ஆசைதான். மேலும் நடிகை நயன்தாரா தாலியை கழட்டாமல் தான் நடிப்பேன் என்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் பாராட்டதக்க விஷயம்.

இதனால் தான் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் என்பதற்கான காரணத்தை பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …