விவகாரமான கேள்விக்கு கூலாக பதில் கூறிய நஸ்ரியா..!

தமிழில் நடிகை நஸ்ரியா நேரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்த கனவு நாயகியாகி போனார். பின்னர் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் 2014ஆம ஆண்டு தீடிரென மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் ஒரீரு மலையாள படங்களில் நடித்திருந்த இவர், தற்போது தமிழ் தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள “அன்டே சுந்தரனிகி” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் “அடடே சுந்தரா” மற்றும் “ஆஹா சுந்தரா” என பெயரிட்டப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல அறிமுகமான நானி நடித்துள்ள இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நானி ஜோடியாக ‘அன்டே சுந்தரனிகி’ என்ற படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார்.

லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட நஸ்ரியாவிடம், ‘இஸ்லாமிய பெண்ணாக இருந்துகொண்டு, படத்தில் கிறிஸ்தவ பெண் கதாபாத்திரத்தில், இந்து ஆணுக்கு மனைவியாக நடித்து இருக்கிறீர்கள்.

எப்படி இது சாத்தியம்’, என்று வில்லங்கமான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நஸ்ரியா, ‘‘எனக்கு கதை பிடித்து இருந்தது. அதனால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு நடித்தேன், அவ்வளவுதான்’’, என்று விளக்கம் கொடுத்தார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …