நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்த ராஜா ராணி திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா. ஒரு கட்டத்தில் இறந்து விடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காட்சி படத்தின் திருப்புமுனையாக இருந்தது.
எனவே நடிகை நஸ்ரியாவின் ரசிகர் பட்டாளம் இந்த படத்தில் இருந்து கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான திருமணம் எனும் நிக்கா என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
மட்டுமில்லாமல் வாயை மூடி பேசவும் மற்றும் நடிகர் தனுஷுடன் நய்யாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். நையாண்டி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவர் செய்த ஒரு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் இடம்பெற்ற இனிக்க இனிக்க பார்ப்பதென்ன என்ற பாடலில் வேறு ஒரு நடிகையின் தொப்புளை என்னுடைய தொப்புள் என்பது போல காட்டி விட்டார் படத்தின் இயக்குனர் என்று ஒரு குற்றச்சாட்டு ஒன்றை வைத்து பரபரப்பை கிளப்பினார் நடிகை நஸ்ரியா.
மட்டுமில்லாமல் பொது வெளிகளில் காரை நிறுத்திவிட்டு சக சாலை பயணிகளிடம் சண்டை போடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து நடிகை நஸ்ரியாவின் டேமேஜ் ஆனது. நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா..? என்று நஸ்ரியாவை நோக்கி எதிர்மறையான கருத்துக்கள் வர ஆரம்பித்தன.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் நடிகை நஸ்ரியா. தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவுக்கு போட்டியாக அவருடைய இடத்திற்கு வரக்கூடிய தகுதி இருக்கிறது இவருக்கு என்ற அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருநத்தார்.
ஆனால், திருமணம் செய்துகொண்டு திருமண வாழக்கையில் ஐக்கியமானார் அம்மணி. பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் ஐஸ் கிரீம் விளம்பர படம் ஒன்றில் நடித்து இருக்கிறார் நடிகை நஸ்ரியா. இதில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.