Neelima Rani : 2000 ஆண்டுகளில் சின்னத்திரை ராணியாக வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி இவர் நடித்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்கள் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
மேலும் சினிமாவிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பல படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார்.
அந்த வகையில் பாண்டவர்பூமி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றிப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
தற்போது சீரியல் மற்றும் சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்றே விலகி சீரியல்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
மேலும் அவ்வப்போது ஆல்பம் பாடல்களையும் தயாரித்து வரும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாகவும் தன்னுடைய பணியைத் தொடர்ந்து வருகின்றார்.
சமீபத்தில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. தொடர்ந்து கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நீலிமாராணி.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு தோன்றிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த ரசிகர்கள் நீலிமா ராணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்