கல்தோன்றி மண்தோன்றாக் காலம் என்று கூறுவார்கள். மனிதர்கள் என்று பிறந்தார்களோ அன்றே அவர்களுக்குள் பிரிவினைகள் பல்கிப்பெருகி முளைக்கத் தொடங்கி விட்டது. இதில் ஜாதி இன்று வரை சமுதாயத்தில் புரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த ஒட்டுமொத்த ஜாதி அமைப்பை பற்றிய சில முக்கியமான தகவல்களை சில இயக்குனர்கள் சினிமாவில் மிக நேர்த்தியான முறையில் பதிவு செய்து செல்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது பா ரஞ்சித் இயக்கிய இருக்கக்கூடிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதீய வேற்றுமைகள் பற்றி மிகவும் ஆழமான முறையில் கருத்துக்களை மிக நேர்த்தியாக இந்த படத்தில் பகிர்ந்திருக்கிறார். இதிலும் கூடாவ சாதி என இளைஞர்களை யோசிக்கும் வகையில் படம் உள்ளது.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் மெட்ராஸ் பட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கபாலி,காலா படத்தை அடுத்தடுத்து தந்ததோடு தற்போது இந்த நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தை மிக நேர்த்தியான முறையில் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயனின் நடிப்பு மிகவும் மெச்சிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது.
இது ஒரு முழுநீள காதல் கதை. இந்தப் படத்திலும் பா ரஞ்சித் சாதிகள இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மிகவும் அருமையான முறையில் நேர்த்தியாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற காதலை கூட சகஜமாக இருக்க விடாமல் ஜாதியை உட்புகுத்தி சமூக கட்டமைப்பு எப்படி நகர்கிறது என்பதைத் தான் நட்சத்திரம் நகர்கிறது என்ற பெயரில் இவர் அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார் என்று தோன்றும்.
மிக நேர்த்தியாக தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்வதின் மூலம் தமிழ் திரையுலகில் வலம் வரும் ஒரு ஜாம்பவான் என்று நாம் பா. ரஞ்சித்தை கூறலாம்.
தனது இயல்பான பாணியில் தான் எந்த நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தையும் மிக நேர்த்தியாக வடிவமைத்து மக்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக கொடுத்திருக்கிறார்.