பெரிய மனசுக்காரராய்…. நடிகர் நெப்போலியன் திருநெல்வேலியில் கட்டிய மருத்துவமனை பற்றி தெரியுமா? உள்ளே விவரம்…!!

தமிழ் திரையுலகில் உயரமான நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் எடுப்பான தனது நடிப்பினால் அனைவரின் மனதையும் தொட்டவர். அதுமட்டுமல்லாமல் இவரது கட்டை குரல் மற்றும் சண்டையிடும் ஸ்டைலுக்கு என்றே சில ரசிகர்கள் இருந்தார்கள்.

 இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் பட்டையை கிளப்பி வந்த இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்ததின் காரணத்தினால் அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவும் இவர் செயலாற்றி இருக்கிறார்.

 இப்போது திருமணமாகி இரண்டு பிள்ளைகள் பெற்றுவிட்ட நிலையில் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பது ஏன் என்ற கேள்வியை பலர் மத்தியில் எழுப்பியுள்ளது. இதற்கு காரணம் இவரது  மகன்களில் ஒருவருக்கு தசை சிதைவு நோய் உள்ளது.

இதனால் 10 வயதுக்கு பிறகு இவரால் நடக்க முடியாமல் போனதால் தமிழகத்தில் இருக்கும் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில், பாரம்பரிய மருத்துவம் பார்க்கக்கூடிய வைத்தியரிடம் காட்டி இருக்கிறார்.

 அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்கு இடவசதி இல்லாமல் பெறும் அவதிக்கு பல நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மேலும் இவர் தனது மகனின் விருப்பத்திற்கு ஏற்றபடி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.இங்கு அவர் சொந்தமாக ஒரு கம்பெனியை நடத்தி வருவதோடு விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தனது மகனுக்காக சொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் குடியேறி இருக்கிறார்.

இது போல நோய் உள்ள குழந்தைகளுக்கு படிக்கக்கூடிய வசதி அங்கு அதிகமாக இருப்பதால்தான் அவர் இடம்பெயர்ந்து சென்றிருக்கிறார். இதனை அடுத்து தன் மகனைப் போலவே உள்ள மற்ற குழந்தைகள் சிரமப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்திற்காக  திருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ள ஊரில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி தந்திருக்கிறார்.

 இந்த மருத்துவமனையில் இதுபோல இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது என்பது பாராட்டுத்தக்கக்கூடிய விஷயமாகும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …