இன்றைய அவசர உலகத்தில் பெரும்பாலும் பாஸ்ட் புட் உணவு வகைகளை மக்கள் சாப்பிடுகிறார்கள். இதனால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது .இதே போல் இரவு நேரத்தில் தூங்கும் போது நம்மில் சிலர் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.அவ்வாறு செய்வதால் உடல் நிலை சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் பால் சாப்பிடும் போது எந்த மாதிரியான மாற்றங்கள் உடலில் வருகிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். மக்களிடையே இரவில் பால் குடிப்பதால் நோயை தடுக்க முடியும் என்ற தவறான கருத்து நிலவுகிறது.
பொதுவாக வயது அதிகரிக்கும்போது கால்சியம் அளவு குறைகிறது. இதனைத் தடுக்க அதிக அளவில் பால் அருந்துமாறு அறிவுரை வழங்கப்படுகிறது. உண்மையில் அதிக அளவில் பால் அருந்துவதால் எலும்பு மெலிய தொடங்குகிறது.
மனித ரத்தத்தில் கால்சியம் அளவு 9 முதல் 10 மில்லிகிராம் ஆக இருக்கும் போது ரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு திடீரென உயரும்.
தொடக்கத்தில் கால்சியம் அளவு அதிகரித்து உள்ளது போல் தோன்றினாலும் கால்சியத்தின் அளவு குறையும் போது இரத்தத்தில் கால்சியம் அளவு திடீரென உயரும் போது அதை வெளியேற்ற உடல் முயற்சி மேற்கொள்ளும். அதன்படி சிறுநீரகத்தில் சிறுநீர் வழியாக கால்சியம் வெளியேறும்.
உண்மையில் கால்சியம் அளவை பெறுவதற்காக பாலை அருந்தும் போது உடல் அமைப்பின் ஒட்டுமொத்த கால்சிய அளவு குறையத் தொடங்கும். அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் பொது மக்கள் நாள்தோறும் எலும்பு முறிவு மற்றும் எலும்பு மெலிதல் நோயின் தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது.
உணவுப் பொருள் வேறு எதுவும் இல்லாத போது பால் எளிதாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் தாகமாக இருக்கும் போதெல்லாம் நீரைப்போல் பாலை அருந்துகிறார்கள். இது மிகவும் தவறானது பாலில் உள்ள புரோட்டீனை 80 சதவீதம் புரதம் உள்ளது. இது வயிற்றுக்குள் சென்றதும் ஒன்றாக சேர்ந்து செரிமானத்தை சிக்கலாகிறது.
மேலும் கடைகளில் விற்கப்படும் பாலில் கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தும் வகையில் செயற்கை பொருட்களை இணைந்து விடுகிறார்கள். இதனால் மற்ற மூலக்கூறுகள் உடன் கலந்து கொழுப்புப் பொருட்களின் தன்மை அதிகரித்து விடுகிறது. அதாவது பாலில் கலக்கப்படும் பொருள் உடலின் தவறான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இது 212 டிகிரி பாரன்ஹீட் வெப்ப அளவு அதிகரிக்கும்போது தொடங்குகிறது. எனவே கடைகளில் விற்கப்படும் பாலில் முக்கியத்துவம் வாய்ந்த நொதிகளோடு கொழுப்பு மூலக்கூறுகள் கலந்து விடுகின்றது. இதனால் அதிக வெப்பநிலையில் இதன் சத்து மாறிவிடுகிறது.
எனவே பால் மிக மோசமான உணவாக திகழ்கிறது. இன்னும் நாம் பயன்படுத்தும் பாலில் அதிக அளவில் ரசாயன கலப்பு உள்ளது. மாடுகள் அனைத்தும் இயற்கையாக விளையும் பொருட்களை உண்ணாமல் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பச்சையை தின்கிறது..