விஜய் டிவியின் ராஜ பார்வை சீரியலில் சாரு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ரேஷ்மி ஜெயராஜ். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
பிறகு மாடலிங் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் ‘ஜோதே ஜோதேயலி’ என்ற கன்னட சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மதுமகலு, ஜஸ்ட் மாத் மாத்தலி போன்ற சீரியல்களில் நடித்தார்.
கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து கொண்டிருந்தவர் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.சன்டிவியின் விதி சீரியலில் அறிமுகமானார். எனினும் அந்த கேரக்டர் அவ்வளவாக பேசப்படவில்லை.
இதை தொடர்ந்து விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடரில் தாமரை என்கிற கேரக்டரில் நடித்தார்.
இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். மாயன் -தேவி ஜோடிக்கு இருந்த ஃபேன்ஸை விட அரவிந்த் – தாமரை ஜோடிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.
அதில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சன்டிவியின் செல்வமகள் மற்றும் கன்னடத்தில் உதயா டிவியில் தேவையானி போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
இப்படி சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் ரேஷ்மி ஜெயராஜ் தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய தொடையழகை காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.