பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம் மற்றும் சக பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் ஆகிய இருவரும் முன்னாள் காதலர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நிரூப் நந்தகுமாரை பழிக்குப்பழி வாங்கும் விதமாக பிக்பாஸ் வீட்டிலேயே சம்பவம் செய்த நடிகை அபிராமி வெங்கடாசலம் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் வேகவேகமாக இணையத்தில் வைரலாகி வருவதை பார்க்க முடிகிறது. முன்னதாக பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் நடிகை யாஷிகா ஆனந்திற்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கும்.
இந்த வீடியோ ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் நடக்கும் பொழுது நிரூப் நந்தகுமாரும் நடிகை பிக்பாஸ் அபிராமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து கடுப்பான பிக்பாஸ் அபிராமி நிரூப் உடனான காதலை முறித்துக் கொண்டு இருக்கின்றார்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் நிரூப்பை பழிவாங்கும் ஒரு சம்பவத்தை செய்துள்ளார் நடிகை பிக் பாஸ் அபிராமி. அதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு நாள் சக பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் மற்றும் நடிகை பிக்பாஸ் அபிராமி ஆகிய இருவரும் ஸ்மோக்கிங் அறையில் தனியாக இருப்பார்கள்.
அப்பொழுது அங்கு எதேச்சையாக செல்லும் நிரூப் நந்தகுமார் எதையோ பார்த்து விட்டு அய்யய்ய என்று சொல்லிவிட்டு கடுப்புடன் வந்து அமருவார். அப்போதே இந்த விஷயம் பெரிய சர்ச்சையானது. அப்படி என்னத்த பார்த்துவிட்டு இப்படி கடுப்பான முகத்துடன் வந்து அமர்ந்து கொண்டு இருக்கின்றார்..? சக பிக் பாஸ் போட்டியாளர் இடம் எதுவும் கூறாமல் இப்படி உம்மென இருக்கிறாரே..? என்று பல விவாதங்கள் கிளம்பியது.
இந்நிலையில், தன்னை காதலித்து கொண்டிருக்கும் பொழுது யாஷிகா ஆனந்திற்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த இல்ல.. இப்போ பாரு வேடிக்கையா என்று நடிகை பிக்பாஸ் அபிராமி அவரை பழி வாங்கும் விதமாக எதையோ செய்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அப்படி என்னதான் அந்த ஸ்மோக்கிங் ரூமுக்குள் நடந்தது…? நிரூப் நந்தகுமார் எதனை பார்த்து அய்யய்ய.. என்று கூறிவிட்டு வந்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.