டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை நித்யா மேனன்..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை நித்யா மேனன் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை நித்யா மேனன் சமீபத்தில் சைக்கோ என்ற திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரை படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் நடிகர் விஜய் விக்ரம் சூர்யா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஓரினச் சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை நித்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை நித்யா மேனன் என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட நீச்சல் உடை அணிவதற்கு உடல் எடையை ஒரு பொருட்டல்ல என்று கருத்துக் கூறும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது. சமீபகாலமாக நடிகைகள் பலரும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வெப்சீரிஸ் பக்கம் திரும்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் அந்தந்த வெப்சீரிஸ் இன் புரமோஷனுக்காக நடிகைகளை கவர்ச்சியாக, படுக்கை அறை காட்சிகள் மற்றும் நீச்சல் உடை காட்சிகள் போன்றவற்றில் நடிக்க வைத்து அந்த படத்தின் புரமோஷனை உருவாக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழில் அஞ்சலி, அமலா பால், கௌரி கிஷன், ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்ட பல நடிகைகள் படுமோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை நித்யா மேனன் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …