எகிப்து ராணி..! உனக்கு எதுக்கு தாவணி..! – இளசுகளை சுண்டி இழுக்கும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழில் சில படங்களில்தான் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டியிருக்கிறார். இவர், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் அறிமுகமான படம், ஒருநாள் கூத்து, இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் உடன் நடித்திருந்தார்.இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெத்துராஜ், இதையே தனது பெயரின் பின்னால் வைத்துள்ளார் நிவேதா. இவருக்கு நிஷாந்த் என்ற தம்பி இருக்கிறார். சிறு வயதிலேயே துபாய் சென்றுவிட்ட நிவேதா, துபாயில் பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து விட்டு, அதன்பின்பு தமிழகம் வந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சங்கத் தமிழன், பொன்மாணிக்க வேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்களில் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் மற்றும் விஜய் ஆண்டனி உடன் நடித்த திமிரு புடிச்சவன் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன. மற்ற படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
தமிழ் படங்களில் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிவேதா பெத்துராஜ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தமிழ் படங்களில் தரப்படும் அளவுக்கு, தெலுங்கு படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கிளாமர் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மட்டுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆனால், தமிழ் படங்களில் நடிக்கும்போது ஹீரோயின்களுக்கு கேரக்டர் ரோல் தரப்பட்டு, அவர்களது நடிப்பு திறனை வெளிப்படுத்த நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.அதனால், தமிழ் படங்களில் நடிக்க மற்ற மொழி நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தமி்ழ் பொண்ணாக, தூத்துக்குடியை சேர்ந்த நிவேதா பெத்துராஜூக்கு சரியான தமிழ் படங்கள் அமையாதது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அனுஷ்கா, த்ரிஷா, சமந்தா, சிம்ரன், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் போன்ற பல நடிகைகள் தொடர்ந்து, தமிழ் படங்களில் நடித்துதான் பெரிய நடிகைகளாக முன்னிலை பெற்று, முன்னணி நடிகைகளாக முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட வாய்ப்புகளை எல்லா நடிகையர் விரும்பினாலும், சில வேளைகளில் சந்தர்ப்பமும், வாய்ப்புமே தமிழ் படங்களில், அதுவும் மாஸ் ஹிட் அடிக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தருகிறது.

திமிரு புடிச்சவன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாக இருந்தும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள், நிவேதா பெத்துராஜூக்கு ஏனோ அமையவில்லை. அந்த படத்தில், ஒரு யதார்த்தமான பெண் போலீஸ் அதிகாரியாக தன் நடிப்பை தந்திருப்பார் நிவேதா பெத்துராஜ். ஆனால், அவரது சிறப்பான நடிப்புக்கு தகுந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வராதது துரதிஷ்டமே.

எனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் படங்களை பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கிறார். இந்த முயற்சியும், ஆர்வமும் விரைவில் நிறைய தமிழ் படங்களில் அவரை காணும் வாய்ப்பை ரசிகர்களுக்கு உருவாக்கித் தருமா, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …