ஆத்தாடி.. எத்த தண்டி.. குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நிவேதா தாமஸ்..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, தர்பார் உள்ளிட்ட விரல்விட்டு என்னும் அளவிலான தமிழ் படங்களில் தான் நடித்திருக்கிறார்.

இதில் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் மட்டும் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதற்கு முன்பே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மை டியர் பூதம் என்ற தொலைக்காட்சி சீரியலில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து சிவமயம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, தேன் மொழியாள் உள்ளிட்ட சீரியலில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

தமிழை விட தெலுங்கில் நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை நிவேதா தாமஸ் தற்பொழுது உடல் எடை கூடி குண்டாகி போய் இருக்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க.. ஆள் அடையாளமே தெரியலையே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் வராமல் இருக்கிறது. கடந்த வருடம் எந்தடா சாஜி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார் நிவேதா தாமஸ்.

அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது இல்லை. இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்த நிவேதா தாமஸ் இடையில் திடீரென காணாமல் போனார்.

இப்படி நீண்ட நாள் கழித்து பார்க்கும் ரசிகர்கள் வியப்பின் உச்சத்தில் இருக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …