நயன்தாராவின் 81 வது படம்… பட்டையை கிளப்பும் போஸ்டர் உடன் வெளியான அறிவிப்பு…!!

 நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க இருக்கக்கூடிய 81 வது படம் பற்றிய தகவல்களை பட குழு வெளியிட்டு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருக்கிறார் என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை நயன்தாரா தன்னுடைய சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் நிறுவத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு உறுதியாக கிடைத்துவிட்டது.

 இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை தமிழில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு போன்ற தரமான படங்களைத் தந்த துரை செந்தில்குமார் தான் இயக்க உள்ளார். எனவே அந்த படத்தின் தற்போதைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகிவிட்டது.

 இதனை அடுத்து இந்தப் படம் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் கூறும்போது வித்தியாசமான கதைகளை தருவதில் வல்லவர் துரை செந்தில்குமார் எனவும் இவர் இயக்கிய அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறி இருக்கிறார்.

 இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய விதத்தில் இந்த கதை அமைக்கப்பட்டு இருப்பதால் நிச்சயமாக ஒரு மாஸ் வெற்றியைத் தரும் என்று கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி இருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு இரட்டை குழந்தைகளுக்கு தாயான விஷயத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள்  கிளம்பிய நிலையில் இவர் மீண்டும் நடிப்பில்  களம் இறங்கி இருக்கக்கூடிய நிலையில் இவரது ரசிகர்கள் இவரது தைரியத்தை ஏகோபித்த முறையில் பாராட்டி வருகிறார்கள்.

 மேலும் இந்த படம் இவருக்கு வெற்றி தரும் பாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரும் போற்றக்கூடிய படமாகவும் வசூல் ரீதியில் மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டி தரும் படமாகவும் இருக்கும் என்று தற்போதைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …