லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் நடிக்கும் அனேக படங்கள் அனைத்துமே மாஸ் வெற்றியை தருவதால் மார்க்கெட்டில் முன்னணி நடிகைகளில் முதலிடத்தில் இவர் இருக்கிறார்.
தற்போது இவர் கமர்சியல் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதனையடுத்து தெலுங்கில் தற்போது re-entry கொடுக்க வரும் சிரஞ்சீவி, லூசிபர் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும்.
மிக பிரம்மாண்ட முறையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த காட்பாதர் படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்போது இந்த படத்தை தெலுங்கில் மோகன் ராஜா இயக்க உள்ளார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாரா தான் வேண்டும் என்று சிரஞ்சீவி பிடிவாதம் பிடித்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் எவ்வளவு கோடிகள் செலவானாலும் அவரைத்தான் நீங்கள் கதாநாயகியாக போட வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் இவர் கேட்டிருக்கிறார்.
நயன்தாராவும் தென்னிந்திய நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் உடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புவதாகவும் வளர்ந்து வரும் சத்யதேவ் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ப்பதை தவிர்க்க விரும்புவதாக திரைத்துறை வட்டாரங்களில் உள்ள நெருங்கிய நபர்கள் செய்தியை தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து பாலிவுட்டில் இருக்கும் அனைவரும் நயன்தாராவுக்கு இப்படி ஒரு மார்க்கெட் என்று மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் மேலும் வளர்ந்து வரும் நடிகர்கள் இவருடன் இணைய முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
மேலும் பல வகைகளில் இவருக்கு அரசியலில் இறங்கி சாதிப்பதற்கான சாமர்த்தியம் உள்ளது. ஜெயலலிதா போலவே இவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவு உள்ளது என்று திரைத்துறையினர் கூறியுள்ளார்கள். இதையடுத்து விரைவில் அரசியலில் களம் காணுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.