என்ன கன்றாவி இது..? – ஓவியா-வா இப்படி..? ஆள் அடையாளமே தெரியலையே..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

கடந்த 1991ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் நடிகை ஓவியா இவருடைய உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும்.

மலையாளத்தில் கங்காரு என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா தமிழில் நாளை நமதே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து களவாணி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது இவருடைய பெயரை ஓவியா என்று மாற்றினார் படத்தின் இயக்குனர் சற்குணம்.

அதனைத் தொடர்ந்து தமிழில் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே, சண்டமாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், 90ml, கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது ராஜபீமா, சம்பவம் மற்றும் பூமர் அங்கிள் என்ற மூன்று திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இடையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். பெரும்புகழ் இவருக்கு கிடைத்தது.

ஆனால் அப்படிக் கிடைத்த புகழை எல்லாம் 90 ML என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து சுக்கு சுக்காக நொறுக்கிவிட்டார் நடிகை ஓவியா. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் ரவுண்டு ரவுண்டாக புகை விட்டு தன்னுடைய பெயரை எடுத்துக் கொண்டவர் நடிகை ஓவியா.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

 

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்களில் ஓவியாவை இது அடையாளமே தெரியலே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …