கருப்பு உடையில் வெளிர் என தெரியும் அழகு கீர்த்தி ஷெட்டி புகைப்படம்

தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய திரை உலகத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள். கீர்த்தி ஷெட்டி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மும்பையில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்தவர். இவர் மும்பையில் 2003 செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தவராவார். இவரது தந்தை ஒரு தொழிலைதிபர் ஆவார் இவரது தாய் பேஷன் டிசைனிங் செய்து வருகிறார்.

இவர் பிஎஸ்சி சைக்காலஜி படித்துக் கொண்டிருக்கிறார் மேலும் இவர் விளம்பரத்துறையில் மாடல் அழகியாக பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார் இவரது தாய்மொழி துளு என்றாலும் இவருக்கு துளு ஹிந்தி இங்கிலீஷ் தமிழ் உட்பட பல்வேறு மொழிகள் தெரியும்.

இவர் தனது 17 வது வயதில் ஹிந்தி படமான சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகையாக நடித்திருந்தார். இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சரியாக போகாததால் சில காலம் எந்த திரைப்படங்களிலும் நடிக்காத இவர் தெலுங்கு திரைப்படமான உப்பு அண்ணா என்ற திரைப்படத்தில் புஜி பாபு சனா இயக்கத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் கடலுக்குள் படகில் நடக்கும் சில காட்சிகள் மிகவும் கவர்ச்சியாக இருந்தது என்ற விமர்சனத்தை தாண்டி தெலுங்கு ரசிகர்களால் கனவு கன்னியாக கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகை கீர்த்தி செட்டி.

இந்தப் படத்தில் இவர் கவர்ச்சியாகவும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நடித்திருந்ததால் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடைந்தது தெலுங்கில். மேலும் அந்த படம் கதாநாயகி சார்ந்த கதைக்களம் ஆனதாலும் இவர் அந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய திரை பிரபலம் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து 2021 இல் ஷாம் சிங்காராய் என்ற திரைப்படத்தில் நாணிக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி அவர்கள் நடித்திருந்தார் இந்த படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் சாய் பல்லவிக்கு இணையாக நடித்ததனால் தென் இந்திய திரைப்படத் துறையில் இவருக்கென தனி இடத்தை பிடித்தார் எனலாம்.

அதைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் வெளியான பங்கர் ராஜு என்ற திரைப்படத்தில் நாகலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் நடிகை கீர்த்தி செட்டி அவர்கள் இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வரத் தொடங்கியது நடிகை கீர்த்தி செட்டிக்கு.

அதன் பிறகு தி வாரியர் என்ற தெலுங்கு படத்தில் கமிட் ஆனார் நடிகை கீர்த்தி செட்டி அவர்கள் இந்த படத்தின் பாடல் ஒன்றின் தமிழ் வர்ஷனுக்கு நடிகர் சிலம்பரசன் அவர்கள் பாடல் பாடி கொடுத்தார் இந்த பாடல் தமிழ்நாட்டில் மிகப் பெரிய சீட்டு அடித்தது அதைத் தொடர்ந்து தமிழிலும் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார் நடிகை கீர்த்தி செட்டி அவர்கள்.

அவர் சோசியல் மீடியாவில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அவை தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு instagram-ல் பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …