விடாமல் துரத்தும் இரவின் நிழல்….!! என்ன செய்வார் பார்த்திபன்? படிக்க உள்ளே வாங்க…!!

அடை மழை பெய்ய ஆரம்பித்தால் நிறுத்தாது… அது போல் வெயிலின் கொடுமை தாக்க ஆரம்பித்தால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது போல பார்த்திபனுக்கு இது  அதிர்ஷ்டம் இல்லாத காலம் என்று தான் கூற வேண்டும்.

 இவர் இயக்கிய இரவின் நிழல் படம் தொடர்ந்து சர்ச்சைகளை தன் வசம் மேலும் மேலும் கொண்டு வருகிறதா? அல்லது அது சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.

 இந்தப் படத்தை முதல் சிங்கிள் ஷாட் நான் லீயர் படம் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தது .இதில் இது முதல் படம் அல்ல. இரண்டாவது படம் தான் என்று பலரும் விமர்சித்தார்கள்.

 அந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலை பார்த்திபன் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் இந்தப் படம் உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் ஆன் லீயர் படம் என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டது பார்த்திபனை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியது.

 இதனைத் தொடர்ந்து பார்த்திபன் கூறியது என்னவென்றால் படம் பிரைமில் வெளியாகியுள்ளது. ஆனால் எனக்கு எதுவுமே அவ்வளவு சுலபத்தில் நடைபெறவில்லை. அமேசானில் படம் வெளிவரும்போது யாருக்குமே தெரியாது. எந்த பிரமோஷனும் இந்தப் படத்திற்காக கொடுக்கப்படவில்லை. திடீரென்று ஒரு நாள் வெளியாகிவிட்டது.

 எந்த விளம்பரமும் இதற்காக செய்யப்படவில்லை மேலும் இதிலிருந்த கமெண்ட்ஸை மிகவும் அதிர்ச்சியாக எனக்கு இருந்தது. படித்த பின் இதை மாறுவதற்கு இருபது மணி நேரம் தேவைப்பட்டது.

 தற்போது இருக்கும் கமெண்ட்ஸ் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இதுவும் கூட எனக்கு உடன்பாடு இல்லை. அதை மாற்ற முடியுமா என தெரியவில்லை  என புலம்பி தள்ளி இருக்கிறார். மேலும் பாலில் ஒரு சொட்டு விஷத்தை சேர்ப்பது போல எதிர்மறையான விமர்சனங்கள் இந்த படத்தின் வெற்றியை சீர்குடைத்து விட்டது.

 அதை எவராலும் தவிர்க்க முடியவில்லை அதுமட்டுமல்லாமல் இந்த படம் உலகம் முழுவதும் தெரியவில்லை என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. எனவே விரைவில் இந்த படம் உலகம் முழுவதும் தெரியவரும்.

அதுமட்டுமில்லாமல் இது சிங்கிள் ஷாட்டா நான் லினியரா என்பதெல்லாம் இரண்டாவது விஷயம் தான் இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உண்டு உண்மையானது என்பதை நிரூபிக்க கடுமையான போராட்டங்களை செய்ய வேண்டி இருக்கும்.

 சினிமாவைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு இல்லாத எனக்கு நான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரக்கூடிய எனக்கு இது போன்ற சோதனைகள் ஏற்படுவது இயல்புதான் .மேலும் இந்த இரவின் நிழல் படத்தின் மேக்கிங் வீடியோ என்னிடம் உள்ளது இதை விரைவில் நான் வெளியிடலாம்.

 குற்றம் செய்தால் அதில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம். இப்படி பார்த்திபன் பேசிய போது ரசிகர்கள் அனைவரும் ஐயோ பாவம் என்று இவரின் நிலையை எண்ணி வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …