“மிட் நைட்ல.. அதை பாத்துட்டேன்… பதட்டத்துல.. என் மேல புகார் குடுத்துட்டாங்க..” – பார்வதி நாயர் மேக்கப் மேன் பகீர்..!

கடந்த சில தினங்களாக நடிகை பார்வதி நாயர் தனது ஒப்பனைக் கலைஞர் (Makeup Artist) மீது கொடுத்த புகார் மற்றும் ஒப்பனைக் கலைஞர் பார்வதி நாயர் மீது கொடுத்த புகார் ஆகிய விஷயங்கள் சினிமா வட்டாரங்களை அதிரவைத்த வருகின்றது.

பிரபல நடிகை பார்வதி நாயர் தன்னுடைய மடிக்கணினி மற்றும் ஐபோன் உள்ளிட்டவற்றை திருடி விட்டார் என்று தன்னுடைய ஒப்பனைக் கலைஞர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பார்வதி நாயர் மீது மறுப்பு புகாரை வைத்திருக்கிறார் ஒப்பனைக் கலைஞர். அவர் கூறியதாவது பார்வதி நாயர் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இதனை செய்திருக்கிறார்.

மிட்நைட் நேரங்களில் அவரை சந்திக்க தெரியாத நபர்கள் வருவார்கள். அப்படி ஒருநாள் தெரியாத நபர் ஒருவர் வந்தபோது நான் பார்த்துவிட்டேன். இதை பார்வதி மேடமும் பார்த்தார்கள். இதனால் அவர்கள் மிகவும் பதட்டமாகி விட்டார்கள்.

எங்கே நான் இதனை வெளியே சொல்லி விடுவேனோ..? என்று பயந்து கொண்டு என் மீது தாக்குதல் நடத்தினார்கள். என்னை அடித்தார்கள். என்மீது எச்சில் துப்பினார்கள். அதை எல்லாம் தாண்டி இப்போது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

முன்னதாக என் மீது கற்பழிப்பு புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார்கள். ஆனால் தற்போது லேப்டாப், போன்களை திருடி விட்டதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். இது உண்மை கிடையாது. எனக்கும் பார்வதி நாயர் மேடம் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அவர்கள் இரவு நேரத்தில் தெரியாத நபர்களுடன் சந்திக்கும் பொழுது நான் எதேர்ச்சையாக பார்த்துவிட்டேன். அதனால்தான் என் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

இதனால் பார்வதி நாயரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கொண்டு என்னை அடித்து தாக்கினார்கள் தற்பொழுது என் மீது காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்கள். இது உண்மை கிடையாது. உண்மைக்கு புறம்பானது என்று தன்னுடைய பேட்டியில் தன்னுடைய நிலையை பேசியிருக்கிறார் ஒப்பனைக் கலைஞர்.

இந்நிலையில் பார்வதி நாயர் இடம் ஏற்கனவே ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது பார்வதி நாயர் எந்த ஒரு விஷயத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்.

மேக்கப் போடும் போது மொபைல் போன்களை நோண்டிக் கொண்டே இருப்பார். மேக்கப் போடும் பொழுது எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் மேக்கப் போட்டு முடித்த பிறகு இது சரியாக இல்லை அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு மீண்டும் முதலிலிருந்து செய்யுங்கள் என்று கூறுவார்.

அவரிடம் பணியாற்றுவது மிகப்பெரிய சவாலான ஒரு விஷயம். மேலும் ஒப்பனைக் கலைஞர்கள் அவர் மரியாதையுடன் நடத்த மாட்டார். ஏதோ வேண்டாத ஆட்களை பார்ப்பது போலவே பார்ப்பார் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இது நடிகை பார்வதி நாயரின் இமேஜை ஏகத்துக்கும் டேமேஜ் செய்திருக்கிறது. மேலும். நடிகை பார்வதி நாயரின் நடத்தை குறித்தும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …