தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த நடிகைதான் பார்வதி நாயர். இவர் கமலஹாசனுடன் இணைந்து உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினோடு கைகோர்த்து நிமிர் என்ற திரைப்படத்திலும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இவரது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் இந்த வீட்டிலிருந்த விலை உயர்ந்த கடிகாரம் லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் போனதாக கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதனை அடுத்து இந்த பொருட்களை தனது வீட்டில் பணிபுரியும் சுபாஷ் சந்திரபோஸ் தான் திருடி இருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த இளைஞன் பார்வதி நாயர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியிருக்கிறார்.
அந்த புகாரியில் பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தன் மீது எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் கமிஷனர் அலுவலகத்துக்கு அவசர அவசரமாக சென்ற நடிகை பார்வதி சுபாஷ் தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதோடு தன்னை தற்போது மிரட்டி வருவதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்.
அது தொடர்பான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு உள்ள இந்த சூழ்நிலையில் நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரியின் அடிப்படையில் நுங்கம்பாக்க போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உட்பட்ட மூன்று பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துயிருக்கிறது.
இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக மாறி வரக்கூடிய சூழ்நிலையில் உண்மை என்ன என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.