பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பாவனி ரெட்டி.. வைல்ட் கார்டு வழியாக உள்ளே நுழைந்த நடன இயக்குனர் ஆமீர் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார்.
இவர் நட்பாக மட்டுமே பழகி வந்தாலும் நடன இயக்குனர் ஆமீர் இவரை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டிலேயே வைத்து இவருக்கு படுக்கையில் பச்சக் என முத்தம் கொடுத்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. கண்டிப்பாக இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்து காதலித்து திருணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும் போலத் தெரிகின்றது. காரணம் நடிகை பாவனி ரெட்டியும், ஆமிரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கேற்றார்போல தற்போது ஆமிருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாவனி ரெட்டி.
இன்று அவரின் பிறந்த நாள் போல தெரிகிறது. அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவரை கட்டி பிடித்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு லவ் யு டா.. ஹாப்பி பர்த்டே என்று என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பாவனி ரெட்டி.
இந்த புகைப்படங்களை பார்த்த சிங்கிள் பசங்க.. எங்க வயித்துல புகைச்சலை கிளப்பிட்டீங்க.. சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்