இன்னைக்கி தாய்மை யை தள்ளிப் போடக் கூடிய முக்கிய காரணியாக இருக்க கூடியது தான் இந்த பிசிஓடி தான். இந்த பிசிஓடி தாக்குதலுக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் கிடையாது .படிச்சவங்க படிக்காதவங்க அப்படிங்கறது தெரியாது.
நாகரிகம் என்கிற பெயரில் நம்ம உண்ணக்கூடிய உணவு முறை மாற்றத்தால் பல பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு தாய்மை அடையாத நிலையில இருக்காங்க. அப்படிப்பட்ட பெண்கள் வந்து எந்த உணவுகளை நீக்கினா இந்த நோய் வராமல் தடுக்கலாமுனு பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்
பிசிஓடி இருக்கிறவங்க தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள் என்ன அப்படின்னு பார்த்தா காபி, சோயா பால் பொருட்கள், சிவப்பு மாமிசம், உருளைக்கிழங்கு ,மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்த்துவிடுங்கள் மிகவும் நல்லது.
பாக்கெட்டுகளில் அடைத்து வைத்திருக்க கூடிய துரித உணவுகளை சாப்பிடுவதை அடியோட மறந்துடுங்க. கொழுப்புச்சத்து உணவுகளையும் நீங்க குறைச்சு எடுத்துக்கோங்க. அப்படி செஞ்சீங்க அப்படினா உங்களுடைய உடல் எடை உங்களுக்குள்ள கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவி செய்யும்.
டிவி பார்க்கும் போது அதிகமாக நொறுக்குத் தீனி சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ளுவது இதையெல்லாம் மறந்துடுங்க.
எந்த இடத்துக்கு உணவு உள்ள இடத்துக்கு நீங்களும் அந்த அளவுக்கு உழைப்பு இருக்கணும் அதை மனசுல வெச்சுக்கிட்டு நீங்க சாப்பிட்டாலே போதும் நிச்சயமாக உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது அதேபோல இந்த பிசிஓடி பிரச்சனை வராமல் இருக்க அதிக கொத்தமல்லி, கீரை வகைகளை உணவோடு சேர்க்க உங்கள் கர்ப்பப்பை பலமாகும்.
இனி இந்த சின்ன பிரச்சனையான பிசிஓடி காக மருத்துவமனையை நோக்கி நம்மை படையெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
எப்பவுமே மாற்றம் உங்க கையில தான் இருக்கு அப்படிங்கற தன்னம்பிக்கையோடு இத ஃபலோ பண்ணினாலே போதும்
நம்ம உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து உடல் உழைப்பு இருந்தது அப்படின்னா அது இருந்த இடம் தெரியாமல் போய்விடும் அதைப்பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு நிச்சயமா வேணும்.