பெப்சி உமா இப்போ எப்படி இருக்கார்.. என்ன பண்றார் தெரியுமா..? – வைரல் போட்டோஸ்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான ஒரு தொகுப்பாளினி என்றால் அதனை பெப்சி உமா என்று கூறலாம். தொகுத்து வழங்கிய உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை பெப்சி நிறுவனம்  ஸ்பான்சர் செய்தது எனவே இவருடைய பெயர் பெப்சி உமா என்று ஆனது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் இவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மகிழும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இவருடைய தொலைபேசி இணைப்பு கிடைத்து விடாதா..? என்று தவமிருந்த அக்காலத்தில் இளைஞர்கள் ஏராளம் என்று கூறலாம். சன் டிவி கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் வேலை பார்த்து வந்த இவர் சில விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டார் என்று கூட கிசுகிசுக்கள் கிளம்பியது.

ஆனால் அது குறித்த உண்மை தன்மை எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த சன் டிவி மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து விலகிய பெப்ஸி உமா ஒரு கட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

எதற்காக இந்த இடைவெளி என்று கேட்டபொழுது எல்லாம் காலத்தின் கட்டாயம் வேறு எதுவும் இல்லை என்று தனக்கே உரிய புன்னகையை உதிர்த்து பதில் கொடுத்தார். மேலும் நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டேன்.

அதன் பிறகு எனக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சன் டிவியில் என்னை பணியாற்ற அழைத்தார்கள். அங்கேயே கிட்டத்தட்ட பதினைந்து வருடம் பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் பொழுது எனக்கு பாரதிராஜா கமல்ஹாசன் ரஜினிகாந்த் மணிரத்னம் ஆகியோர் மூலம் எனக்கு சினிமாவில் நடிக்க கூட அழைப்புகள் வந்தது.

ஆனால் நான் ஒரு சோம்பேறி. எனவே சினிமாவில் நடிக்கும் அவர்கள் எல்லாம் எனக்கு பொறுமை கிடையாது. ஆசையும் கிடையாது. எனவே சினிமா வாய்ப்புகளை நான் மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் பெப்சி உமா.

மேலும் அரசின் மீதான அழுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட தொந்தரவுகள் காரணமாகவே நான் வீட்டை விட்டு வெளியேறினேன் அதன்பிறகு எலி காய்ச்சல் சிக்குன்குனியா என கிட்டத்தட்ட ஆறு மாத காலம் படுத்த படுக்கையாய் இருந்தேன்.

அதிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறேன். அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …