குந்தவையின் அழகில் மயங்கி… டிவிஸ்ட் ஐ கவனிக்காமல் விட்ட பொன்னியின் செல்வன் ஆடியன்ஸ்…!

கல்கி எழுதிய அமர காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கி மிக பிரம்மாண்ட முறையில் கடந்த மாதம் வெளியிட்டார்கள்.

பிரம்மாண்டமான இந்த வரலாற்று காவியத்தில் சோழர்களின் வரலாறு மிகத் தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது. பல கோடி பொருட் செலவில் இந்த படமானது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி,ஜெயம் ரவி என்று ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது என்று கூறலாம். உலகத்தரம் வாய்ந்த இந்த படம் தற்போது 500 கோடி வசூலை எட்டிப் பிடித்துள்ளது.

ஏற்கனவே கல்கி எழுதிய இந்த நாவலை படித்தவர்களும் படிக்காதவர்களும் திரைப்படத்தை பார்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்ற வேளையில்  இந்த படத்தில் இரண்டாவது பகுதியும் விரைவில் வெளிவர உள்ளது.

 முதல் பகுதியில் முக்கிய திருப்புமுனை ஒன்று உள்ளது. இது ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது. அது என்ன என்றால் செம்பியன் மாதேவி மற்றும் சேந்தன் அமுதன் என்ற இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பு தான் அந்த விஷயம் ராக்ஷச மாமனே.. பாடலில் சேந்தனாக வரும் அஸ்வின்  திரிஷாவை மறைமுகமாக சந்திப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.

 ஆனால் இங்கு தான் அந்த ட்விஸ்ட் உள்ளது. ஏனென்றால் இந்தப் பாடலில் திரிஷாவின் அறிமுகம் காட்டப்பட்டு இருந்ததால் அனைவரும் அவர் அழகில் மயங்கி அவரின் நடிப்பை மட்டுமே பார்த்திருப்போம் மேலும் இளவரசியை வந்தியத்தேவனை பார்க்கும் பார்வையும் ரசிக்க வைத்திருந்தது.

 தற்போது வலைதள பக்கத்தில் சேந்தனாக நடித்த அஸ்வின்  சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

இதனையடுத்து தற்போது இதன் இரண்டாவது பாகம் வெளிவரக்கூடிய தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால் இரண்டாவது பாகத்தையும் பார்ப்பதற்காக ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்டமான இந்த சோழர் காவியத்தை எதிர் வரும் தலைமுறை உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் மணிரத்தினம் இயக்கி வழங்கியிருப்பது அவரை பலரும் பாராட்டும் விதத்தில் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …