நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே ( Pooja Hegde ). பீஸ்ட் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய படங்களின் ரிலீஸுக்காக அவர் காத்திருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பூஜா கூறியதாவது,திரையுலகில் நம்பர் 1, நம்பர் 2 என்று எல்லாம் சொல்வதில் எனக்கு இஷ்டமில்லை. படத்தின் வெற்றியை பொறுத்து அது மாறிக் கொண்டே இருக்கும். அதனால் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டதே இல்லை.
இதையும் படிங்க : நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் உணர்வுகள் உண்டு – போட்டு உடைத்த நடிகை கீர்த்தி ஷெட்டி..!
ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு பிடித்தபடி நடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். பீஸ்ட் படத்தில் நான் விஜய்யுடன் சேர்ந்து ஆடிய பாடலுக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார்.தமிழில் நம்பர் ஒன் நடிகை நயன்தாரா என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நம்பர் ஒன் இடம் நிலை அல்ல, அதில் ஆர்வமும் இல்லை என்று பூஜா கூறியிருப்பது நயன்தாராவை குத்திக்காட்டுவது போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
பூஜா ஏதோ தன் மனதில் பட்டதை கூற அது இப்படியாகிவிட்டது. சமந்தாவுடனான பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில் நயன்தாராவுடனா..?