கால் நரம்பு பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பூஜா ஹெக்டே … மகேஷ்பாபுவின் படத்தில் நடிக்க உள்ளாரா?

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சக்கை போடு போட்டு நடித்து வரும் முன்னணி நடிகை தான் பூஜா ஹெக்டே மும்பையைச் சேர்ந்தவர். இந்த நடிகை தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர்.

 இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இவர் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த ஒரு படத்தில் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இவரது கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.

 மேலும் இவர் சிகிச்சையை மேற்கொண்டு வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

 இதனை அடுத்து இவர் தற்போது ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் விபத்துக்கு பிறகு தான் நன்றாக தேறி வருவதாகவும் மிக விரைவில் அந்த நரம்பு பாதிப்பிலிருந்து  மீண்டு விடுவார் என்றும் பழைய நிலையை தனது கால் விரைவில் எட்டிப் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

அப்படி தனது கால் சரியாகி விட்டால் இவர் உடனே இவர் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28 வது படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அந்த வகையில் அடுத்தடுத்து மகேஷ்பாபுவின் வீட்டில் ஏற்பட்டிருக்கும் துக்க சம்பவங்களால் அவரது படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் மாதம் மீண்டும் மகேஷ்பாபு தன்னுடைய 28 வது படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கலாம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் பூஜா அவரோடு இணைந்து நடிப்பார் என தெரியவந்துள்ளது.

 ஏற்கனவே பூஜா ஹெக்டே மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக மகரிஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் அனைவரும் விரைவில் அவர் மகேஷ் பாபு திரைப்படத்தில் நடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் விரைவில் பெறுவார் என்று கூறியிருக்கிறார்கள். அதற்காக இவர்கள் கடவுளையும் பிரார்த்தித்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …