நடிகை சமந்தா தற்போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அந்த நோய்க்கான மாற்று மருத்துவத்தை எடுத்துக்கொண்டு வருகிறார். மேலும் தற்போது உடல்நிலை அதிகளவு பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் வெளிநாடு சென்று அதற்கான மருத்துவம் பார்ப்பதற்கு உத்தேசித்து இருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது பூனம் கவுர் நடிகை சமந்தா போலவே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
தெலுங்கு நடிகையான இவர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி உள்பட பல படங்களில் நடித்தவர்.
மேலும் தற்போது நண்டு என் நண்பன், கெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பைப்ரோமியால்ஜியா எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோய் இருப்பவர்களுக்கு தசை வலியோடு கூடிய உடல் அசதி தூக்கமின்மை போன்றவை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் மனநிலையிலும் பாதிப்புகள் ஏற்படுமாம்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் மிகவும் இவர் சிரமப்பட்டதாகவும் அதன் பிறகு இந்த நோயோடு வாழ பழகிக் கொண்டிருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்த உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த சங்கடத்தில் இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இவர் விரைவில் இந்த நோயிலிருந்து விடுபட்டு எதார்த்தமான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.
அடுத்தடுத்து திரை உலகில் இருக்கும் நட்சத்திர நடிகைகளுக்கு இது போன்ற வினோத நோய்கள் ஏற்படுவதில் காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அதிக படங்களில் நடித்து வரும் இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து அதற்கு தகுந்தது போல் இவர்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார்கள்.