என்னது…? காப்பான் பட நடிகை பூர்ணாவின் கோலாகலமாக திருமணம்…!

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இவரின் மேலும் கந்தகோட்டை தகராறில் கொடிவீரன் அடங்கமறு காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார் .மேலும் இவரின் நடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இவர் தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது என்று தகவல்கள் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் எனது அடுத்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கிறேன் என்று இவர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவரது திருமணம் நின்று விட்டதாக வலைதளத்தில் செய்திகள் மிக விரைவாக பரவி வந்தது.

 இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தற்போது வலை தளத்தில் பதிவிட்டு எப்போதும் என்னுடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார் இதனையடுத்து வலைதளத்தில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 எப்போது போகலாம் இஸ்லாமிய முறைப்படி தனது திருமணத்தை நடத்தி இருக்கிறார் இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதோடு எப்போதும் துன்பத்தில் உங்களுடன் இருப்பேன் உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்பது போன்ற வார்த்தைகளை எழுதி அவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருப்பது ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இவர்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இவரது  திருமணமான புகைப்படங்கள் அனைத்துமே மிக அருமையாக உள்ளது ரசிகர்கள் தொடர்ந்து இதை பார்வை இட்டு வருகிறார்கள்.

மேலும் ரசிகர்கள் அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் களை இந்த புகைப்படங்களுக்கு குவித்து வருவதால் திருமணமான இந்த இருவரும் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …