கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஷாம்னா காசீம். சினிமாவிற்காக தன் பெயரை பூரண என்று மாற்றிக்கொண்டார். தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா சமீபத்தில் துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார்.
என்றாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியேற்றக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
குறிப்பிடும்படியாக தமிழில் கொடைக்கானல், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா கடந்த 2021-ம் ஆண்டு வெளியான தலைவி திரைப்படத்தில் சசிகலா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
தொடர்ந்து பேய் படங்களில் பிஸியாக நடித்து இருந்தார் மேலும் திரில்லர் மற்றும் காதல் உருவாகும் உருவான திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார்.
இவருடைய நடிப்புக்கு பல இயக்குனர்கள் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய தலையை நிஜமாகவே மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருந்தார் நடிகை பூர்ணா.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தன்னுடைய கட்டுமஸ்தான கட்டழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிய கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்ததும் இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.