பூவே உனக்காக சீரியல் பூவரசி யாருன்னு தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பூவே உனக்காக என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியலில் இடம்பெற்ற பூவரசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை ராதிகா ப்ரீத்தி இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார்.

அதன்பிறகு ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டிருந்த இவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த இவர் கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதன் பயனாக இவருக்கு பல்வேறு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெங்களூரில் பிறந்தவர் என்றாலும் கூட சென்னையில்தான் இவர் படித்து வளர்ந்து இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான இவர் நடிகர் விஜய் நடிக்கும் படங்களை ரிலீஸ் நாளன்று பார்த்து விடுவது வழக்கமாம். சீரியலில் நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய பிரபலம் அடைந்தார் நடிகை ராதிகா ப்ரீத்தி.

இந்த சீரியலின் கதாநாயகனின் காதலியாக நடித்திருந்தார். இவருடைய தந்தை ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வெறும் இரண்டே இரண்டு படங்கள்தான் பார்த்து இருக்கிறாராம் ராதிகா பிரீத்தி.

இதுவே இவருக்கு திரைப்படங்கள் மீதான அதீத ஈர்ப்பு காரணமாக அமைந்திருக்கிறது. இவர் பார்த்த இரண்டு படங்களுமே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

அதன்படி கல்லூரியில் சேர்ந்த பிறகு மாடலிங் துறையில் கவனம் செலுத்தி விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் பயனாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் தெலுங்கில் சில சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழில் சில விளம்பரப் படங்களில் நடித்த இவர் பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தான் நடித்த சில மாதங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அறிமுகத்தையும் பெற்றார் நடிகை ராதிகா ப்ரீத்தி. ஒரு ராணுவ வீரரின் மகள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு வெறும் இரண்டே இரண்டு படங்கள்தான் பார்த்திருக்கிறார்.. ஆனாலும்.. தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …