பார்த்திபனுக்கு மட்டும் தான் அப்படி இருக்குமா.. எனக்கு இருக்க கூடாது..! – நடிகை சீதா பளீர் கேள்வி..!

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் பார்த்திபன் அதே அளவுக்கு கொண்டாடப்பட்டவர் நடிகை சீதா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் எவ்வளவு அற்புதமான ஒரு விஷயமாக இருக்கும். அது நடந்தது.

நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.  1990-ம் ஆண்டு திருமணம் செய்து இருவரும் கடந்த 2001-ம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இது திரையுலக வட்டாரம் மட்டும் இல்லாமல் இருவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொதுவாக திருமணம் முடிந்து ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் விவாகரத்து பெரும் நட்சத்திர தம்பதிகளை பார்த்திருக்கிறோம்.

ஆனால் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து விட்டு பிரிந்து செல்கிறார்களே என்று வியந்து போனார்கள் ரசிகர்கள். அதன் பிறகு சீரியல் நடிகர் சதீஷ்-ஐ திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நடிகை சீதை அவரையும் கடந்த 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை சீதா பார்த்திபனுக்கு மட்டும்தான் என்னுடைய மனைவி எனக்கு மட்டும்தான் என்று நினைப்பிருக்குமா..? எனக்கு என்னுடைய கணவர் எனக்கு மட்டும்தான் என்ற ஆசை இருக்கக் கூடாதா..? என்று பேசியிருக்கிறார்.

என்னுடைய கணவர் எனக்கு மட்டும்தான் என்று நினைத்தது தான் என்னுடைய விவாகரத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது என்பதை சூசகமாக கூறி இருக்கிறார் நடிகை சீதா.

இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இயக்குனர் பாக்யராஜ் ஒரு முறை எதிர்ச்சியாக சீதாவை சந்தித்தபோது மொட்டை அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

இது குறித்து கேட்டபோது நடிகர் பார்த்திபனுக்கு உடல்நிலை சரியில்லை அவர் சரியாக வேண்டும் என்பதற்காக நான் மொட்டை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சீதா.

இதனை பார்த்த பாக்கியராஜ் இந்த காலத்தில் இப்படி ஒரு காதலியா..? பார்த்திபன் கொடுத்து வைத்தவர்.. என்று வியந்திருக்கிறார். ஆனால், அப்படி இருந்த காதல் ஜோடி எப்படி விவாகரத்து வரை சென்றார்கள் என்று குழப்பமாக இருக்கிறது என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Popular Tamil actress Seetha has recently revealed the reasons why she divorced her husband, actor Parthiban. In a candid interview with a local magazine, Seetha shared her story and her struggles over the years.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …