நடிகை பிரணிதா சுபாஷ் உதயன் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தொடர்ந்து நடிகர் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் நடிகை பிரணிதாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தடுமாறின.
ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார் அம்மணி. எனவே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. எனவே, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.
அந்தந்த மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டே திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். தமிழில் கடைசியாக ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவர் நடிக்கவில்லை கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய பெங்களூருவைச் சேர்ந்த நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்த இரண்டு மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் போல தெரிகிறது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் விரைவில் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அந்த புகைப்படத்தை சுற்றி வருகிறது