தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் நடித்தார் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இவருக்கு தமிழில் புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதனால் சொந்த மொழியான கன்னட மொழியில் பட வாய்ப்புகளை தேடிச் சென்றார். அங்கே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய நீண்டநாள் நண்பர் காதலரான என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.
திருமணம் முடிந்த இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிறகு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த கையோடு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி விட்டார் நடிகை பிரணிதா சுபாஷ்.
எனவே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உடற் பயிற்சியை முடித்து விட்டு தன்னுடைய வயிற்றை எடுப்பாக காட்டுகிறேன் என்ற பெயரில் டி-ஷர்ட்டை இழுத்து பிடித்து செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது.. அதுக்குள்ள இப்படியா…? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.