தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியல் மூலம் சீரியல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நன்கு பிரபலமானவர் நடிகை பிரவீணா.
ஏனென்றால் சீரியலில் நடித்த பிரபல இதைக்கொண்டு சில தமிழ் படங்களிலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் பிரவீனா.
விஜய் டிவியின் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 என்ற சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரவீனா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நபர்.
போலீசில் புகார்
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மிகவும் பிரபலமாக நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தன்னுடைய புகைப்படங்களை மோசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார்..
மேலும் அந்த குறிப்பிட்ட நபர்கள் தன்னை பின்பற்றக்கூடிய என்னுடைய நண்பர்களுக்கு தேவையற்ற செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி என்னை மிரட்டியதாகவும் பலமுறை நான் அவர்களை எச்சரித்தும் தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் புகார் அளித்திருந்தார் நடிகை பிரவீணா.
இந்த விவகாரம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை பிரவீணா தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடிகையாக நடித்து வருகின்றார் முதன்முதலில் கடந்த 1992ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தூர்தர்ஷன் நிகழ்ச்சியான சப்தஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள பிரவீனா நான்கு முறை கேரள மாநில அரசின் விருதைப் பெற்றுள்ளார்.
அறிமுகமான படத்தின் தலைப்பே குழந்தையின் பெயர்
சீரியல்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி உள்ளார் இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு பிரமோத் நாயர் என்பவருடன் திருமணமானது பிரமுகர் துபாயில் உள்ள ஒரு பிரபல வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் இந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார்.
இந்த பெண் குழந்தைக்கு, தான் முதன்முதலில் அறிமுகமான திரைப்படமான “கௌரி” என்ற பெயரையே வைத்தார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிகை ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போதும் இளமையாக இருக்கின்றீர்கள் அடிபொலி என்று வர்ணித்து வருகின்றனர்