“கண்ணுக்கு கூலிங் கிளாஸ்.. பாப் கட்டிங்..” – ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்..!

சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சக நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவைப் போல சின்னத்திரையிலும் பல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரீதி சஞ்சீவ் ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர ஜோடி என்று கூறலாம்.

நடிகர் சஞ்சீவ் நடிகர் விஜயுடன் கல்லூரி காலமுதல் நெருங்கிய நண்பராக இருக்கும் ஒரு நபர், நல்ல நடிகர். கடந்த 1989ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செம்மல் என்ற படத்தில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து சந்திரலேகா, நிலவே வா, பத்ரி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் .அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் நடித்து இருக்கும் இவர் மெட்டிஒலி என்ற சீரியலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு சில நிகழ்ச்சிகளில் நடிப்பதில் இருந்து சற்றே விலகி இருந்த நடிகை பிரீத்தி தற்போது மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார்.

அவருடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட இவர் தற்பொழுது கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு பாப் கட்டிங் செய்து கொண்டு புல்லட் அருகில் நின்று கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …