பிரபல நடிகை பிரியா ஆனந்த் சாமியார் நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பெரும்பாலான இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர் சில விவகாரமான விஷயங்களுக்கு பதில் அளித்துள்ளார். வாரத்திற்கு இரண்டு முறையாவது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாமியார் நித்யானந்தா குறித்து பதிவுகளை நடிகை பிரியா ஆனந்த் பகிர்ந்து விடுகிறார்.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை பிரியா ஆனந்த் நித்யானந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொண்டால் என்னுடைய பெயரை கூட மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
என்னுடைய பெயரிலேயே ஆனந்த் என்று இருக்கிறது. இது பற்றி, எப்படியாவது யாராவது வதந்திகளை பரப்பினால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
நித்தியானந்தாவிற்கு ஒரு திறமை உள்ளது. அவரிடம் எல்லோரையும் சுலபமாக தன் பக்கம் ஈர்க்கும் வழி இருக்கிறது. நித்தியானந்தாவை இத்தனை லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ இருக்கிறது என்றுதான் அர்த்தம் என்று கூறியுள்ளார்.
நித்யானந்த் Weds பிரியானந்த்… கவித மாதிரி இருக்கே..!