பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar)செய்தி வாசிப்பாளராக, மக்கள் மத்தியில் அறிமுகமானவர். அதற்கு பிறகு, கல்யாணம் முதல் காதல் வரை என்ற டிவி சீரியலில் நடித்து, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின்பு, கடந்த 2017 ம் ஆண்டில் ‘மேயாத மான்’ படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோ வைபவ் தான் இவருக்கு ஜோடி. முதல் படத்திலேயே, தனது அழகால் நடிப்பால், ரசிகர்களின் மனதை பிரியா பவானி சங்கர் வசீகரித்தார்.
அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், ஓ மணப்பெண்ணே மற்றும் சமீபத்தில் வெளிவந்த அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் இப்போது பிரியா பவானி சங்கர் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் நடித்த சில படங்கள், வெற்றி பெற்றன. சில படங்கள் சுமாரான வெற்றி பெற்றன. எனினும், இவரது நடிப்பும், பங்களிப்பும் படங்களில் சிறப்பாகவே இருந்து வருகிறது.
Priya Bhavani Shankarசெய்தி வாசிப்பாளராக இருந்த நீங்கள், ஏன் நடிக்க வந்தீர்கள் என, இவரிடம் கேட்ட போது, லடசக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக் வேண்டும். அதனால், சினிமா துறைக்குள் வந்தேன் என, ஓபனாகவும், உண்மையாகவும் பதில் அளித்தார்.
முதலில் மிகப்பெரிய வருமானம், பிறகு பெயர், புகழ் என்பதுதான் சினிமா துறைக்குள் பலரும் வர உண்மையான காரணம் என்பதை வெளிப்படையாக பிரியா பவானி சங்கர் ஒத்துக்கொண்டதை பலரும் பாராட்டவே செய்தனர்.
Priya Bhavani Shankarதமிழ் சினிமாவில் இவருக்கு தரப்படும் கேரக்டர்களில், மிக சிறப்பான நடிப்பை வழங்குகிறார். மிக நல்ல முறையில், தனது நடனத்திறமையை வெளிப்படுத்துகிறார். இவர், விளம்பரங்களிலும் அதிகளவில் நடிக்கிறார்.
டிவி சேனல்களில் அதிக விளம்பரங்களில், பிரியா பவானி சங்கர் முக்கிய நிறுவனங்களின் விளம்பரங்களில் தென்படுகிறார். 33 வயதாகும் பிரியா பவானி சங்கரின் சொந்த ஊர் மாயவரம் எனக் கூறப்படுகிறது. இவர், மேயாத மான் படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான தமிழ் – பிலிம்பேர் விருதை பெற்றிருக்கிறார்.
Priya Bhavani Shankarசினிமா நடிகர், நடிகையர் பலரும் நடித்து சம்பாதிக்கும் கோடிக்கணக்கில் தங்களுக்கு வரும் வருமானத்தை, வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்து, அதிலும் கணிசமான வருமானம் ஈட்டுகின்றனர்.
அதுபோல், லயம்ஸ் கார்னர் என்ற பெயரில், பிரியா பவானி சங்கர் புதிதாக ஓட்டல் ஒன்றை சென்னை, மாம்பாக்கத்தில் துவக்கி இருக்கிறார்.
Priya Bhavani Shankarபடங்களில் நடிப்பதோடு, ஓட்டல் நிர்வாகத்தையும் கவனிப்பதில் தீவிரம் காட்டி வரும் பிரியா பவானி ஷங்கர், சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.
அவ்வப்போது, தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். புடவை, மாடர்ன் டிரஸ் எதுவாக இருந்தாலும், பிரியா பவானி சங்கருக்கு எடுப்பாகவும், அழகாகவும் இருக்கிறது. அதனால், இவரது புகைப்படங்கள், ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றன.