பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) அழகான நடிகையாக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறார். அவரது அழகை, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தமிழ் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே, இப்படி அழகாக வாய்க்கின்றனர் என்று பாராட்டுகின்றனர். சமீபத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கூட, தமிழ் பேசும் பெண்ணுடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என, விழா மேடை ஒன்றில், பிரியா பவானி சங்கரை பாராட்டி சொல்லி இருந்தார்.
Priya Bhavani Shankarஅந்தளவுக்கு தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக, மக்கள் மத்தியில் அறிமுகமான இவர், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து, மக்களிடம் வரவேற்பை பெற்றார். அதன்பின்பு, கடந்த 2017 ம் ஆண்டில் மேயாத மான் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், ஓ மணப்பெண்ணே மற்றும் சமீபத்தில் வெளிவந்த அகிலன், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் இப்போது பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இவருக்கு தரப்படும் கேரக்டர்களில், மிக சிறப்பான நடிப்பை வழங்குகிறார். மிக நல்ல முறையில், தனது நடனத்திறமையை வெளிப்படுத்துகிறார். இவர், விளம்பரங்களிலும் நடிக்கிறார்.லயம்ஸ் கார்னர் என்ற பெயரில், பிரியா பவானி சங்கர் புதிதாக ஓட்டல் ஒன்றை சென்னை, மாம்பாக்கத்தில் துவக்கி இருக்கிறார்.
படங்களில் நடிப்பதோடு, ஓட்டல் நிர்வாகத்தையும் கவனிப்பதில் தீவிரம் காட்டி வரும் பிரியா பவானி சங்கர், சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.
Priya Bhavani Shankarஅந்த வகையில், பிரியா பவானி சங்கர் நடிக்க வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, சிறப்பு விருந்தினர்களை பேட்டி காண்பவராக இருந்திருக்கிறார். அதில் ஒரு சேனலில், சிறப்பு நிகழ்ச்சிக்காக வருகை தரும் இயக்குநர் கவுதம் மேனனை அவர் பேட்டி எடுக்கிறார். அப்போது, மைக்கை பிடித்தபடி கருப்பாக, ஒல்லியான தோற்றத்தில், பிரியா பவானி சங்கர் காட்சி தருகிறார். உண்மையிலேயே அது, பிரியா பவானி சங்கர் தானா என, ஆச்சரியமும், அதே வேளையில் அதிர்ச்சியும் அடையும் அளவுக்கு அவரது தோற்றம் காணப்படுகிறது. இந்த வீடியோ பதிவை அவரே பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Priya Bhavani Shankarசினிமாவில் ஏன் நடிக்க வந்தீர்கள் என பிரியா பவானி சங்கரிடம் கேட்ட போது, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படத்தில் நடிக்க வந்தேன் என, வெளிப்படையாக கூறி இருந்தார். அதே போல், சமீபத்தில் வெளியான ருத்ரன் படத்தில், ஒரு கோடி ரூபாய் அவர் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
அந்த பழைய வீடியோ குறித்து குறிப்பிட்டுள்ள பிரியா பவானி சங்கர், இன்று வசதி, வாய்ப்புகள் பெருகி எல்லாவிதமான மகிழ்ச்சியையும் பெற முடிகிறது. ஆனால், கல்லூரியில் படித்த காலகட்டத்தில் எனக்கு போதிய வசதிகள் இல்லை. வாழ்க்கையில், நமக்கான தேவைகள் நிறைய இருக்கிறது. அவற்றை, இந்த உலகத்திடம் இருந்து நாம் போராடித்தான் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Priya Bhavani Shankarஇந்த வெளிப்படையான பதிவும், பிரியா பவானி சங்கரின் அந்த வீடியோ பதிவும் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தமிழகம் இணையத்தை படியுங்கள்.