முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிரியா பவானி ஷங்கர்..! – அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருக்கிறார். தான் அறிமுகமாக கூடிய முதல் தெலுங்கு திரைப்படத்திலேயே நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

சமீபத்தில் ஹாஸ்டல், குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து ரசிகர்களை கவர்ந்தது.

தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் அகிலன், நடிகர் ராகவா லாரன்ஸுடன் ருத்ரன், இயக்குனர் எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக “பத்து தல” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்திய இரண்டு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கக் கூடிய நடிகை பிரியா பவானி சங்கர் இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இந்த படத்தில் நீச்சல் உடையில் சில காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. படத்தின் அறிவிப்பு மட்டும் வெளியாக இருக்கின்றது.

இந்த படத்தை இயக்குனர் ஈஸ்வர் கார்த்தி இயக்குகிறார்.  ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் பிரியா பவனி சங்கர் தன்னுடைய இணையப் பக்கங்களில் நீச்சலுடையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். என்றாலும் கூட, படங்களில் இதுவரை நீச்சல் உடையில் நடித்தது கிடையாது.

ஆனால் தற்போது தெலுங்கு படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்க் கிடக்கின்றனர்.

பொதுவாகவே தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கில் கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் நடிகைகள் நடிப்பதும் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டுவதும் வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில், நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கஞ்சத்தனம் காட்டுகிறார் என்று செல்லமாக கோபித்துக் கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …