நடிகை பிரியாமணி பெங்களூரைச் சேர்ந்தவர் இவர் தெலுங்கு படத்தில் தான் முதல் முதலில் அறிமுகமானார்.
கண்களால் கைது செய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.
நடிகை பிரியாமணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் மாற்றி மாற்றி நடித்துள்ளார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.
பிறகு பிரியாமணி மலையாள திரைப்படத்திலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார் பிறகு போதிய வாய்ப்பு கிடைக்காததால் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பிரியாமணி பணியாற்றினார்.
விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் என்ற சோவில் நடுவராக பணியாற்றி பாராட்டுகளை பெற்றார்.பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரும்பவும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இதனிடையே தனது இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
வாய்ப்புக்காக நிறைய கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிடுகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மக்களும் இதற்கு நிறைய லைக்ஸ்களும் கமெண்டுகளும் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.