தமிழில் டாக்டர் எதற்கும் துணிந்தவன் தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் பரபரப்பான இளம் நடிகையாக காலில் சக்கரம் கட்டிக்கொண்டு கலக்கி கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் சமீபத்திய கனவு கன்னியாக திகழும் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார்.
திரைப் படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நீங்கள் இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளில் தோன்றுகிறார்கள் இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கவர்ச்சியான உடைகள் அணிய வேண்டாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இது குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிரியங்கா மோகன் சினிமா நடிகைகள் கிளாமர் காட்டினால் என்ன தப்பு கிளாமர் காட்டுவது அவர்களுடைய சொந்த விருப்பம் தனிப்பட்ட விஷயம் கொஞ்சம் ஸ்கின் தெரிகின்ற மாதிரி கிளாமர் காட்டினால் உடனே அவரை பற்றி தவறாக பேசக்கூடாது.
அது அவர்களது விருப்பம் எப்படியான உடைகள் அணிய வேண்டும் என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய உரிமை அதனை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது என்று நான் நினைக்கிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் அழகு கொஞ்சும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பிரியங்காவின் இந்த கருத்து எதிர்வரும் காலங்களில் படங்களில் கவர்ச்சியாக நடிக்க நான் தயாராக இருப்பதாக சொல்வதைப் போல் உள்ளது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான நடிக்கும் நடிகைகள் அதனை தொடர்ந்து கவர்ச்சியாக நடித்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்ற உண்மை விளங்கும் எனவே அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் என்று பிரியங்கா மோகனின் இந்த பேட்டியின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது