பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே பள்ளிச்சீருடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது தொகுப்பாளினியாக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை கடந்து இருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.
இந்த சிறப்பான விஷயத்தை விஜய் டிவி தொலைக்காட்சி கேக் வெட்டி கொண்டாடியது. பிபி ஜோடிகள் இரண்டாவது சீசனில் பிரியங்கா கட்டிங் ஸ்பெஷல் இடம் பெற்றிருந்தன.
சின்னத்திரையில் பிரியங்கா தேஷ்பாண்டே என தனி பெயர் மற்றும் புகழ் ரசிகர் பட்டாளம் என எல்லாமே இருக்கின்றது. தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பிறகு பிரபலமான தொகுப்பாளினி ஒருவர் என்றால் அது பிரியங்கா தேஷ்பாண்டே தான் என்று கூறலாம்.
இந்த நம்பிக்கையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கு சென்றார். அந்த நிகழ்ச்சியில் சில எதிர்மறையான கருத்துக்களை நோக்கி வந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அதை சரி செய்து கொண்டு தன்னுடைய பெயரை கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டார் பிரியங்கா தேஷ்பாண்டே.
ஒருவேளை தங்களுடைய சேனலில் இவர் பணியாற்றுகிறார் என்று அவருக்கு சில யோசனைகளை பிக்பாஸ் குழு கொடுத்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது என்றால் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான கெட்ட பெயர் எடுக்கும் போதெல்லாம் அடுத்த சில நாட்களிலேயே அந்த பெயரை அந்த செயலை மறக்கடிக்கும் வண்ணம் நல்லவிதமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து விடுவார் நடிகை பிரியங்கா.
இது நிகழ்ச்சியில் ஹைலைட்டாக காட்டப்படும். பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப உடைகளை அணிந்து கொண்டு வருவதில் கில்லாடி பிரியங்கா தேஷ்பாண்டே. அந்த வகையில், சமீபத்தில் பள்ளி சீருடை சகிதமாக வந்த இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னங்க டிரஸ் இது..? ஸ்கூல்புள்ளைங்க போடுற மாதிரி.. என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.