பிரியங்கா நல்காரி(Priyanka Nalkari) சினிமா, சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானவர். சினிமாவில் நடிக்கத் துவங்கிய பிரியங்கா நல்காரி, நாளடைவில் சீரியல் நடிகையாக வெற்றி பெற்றார். ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல்களில், முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
பிரியங்கா நல்காரியின் சொந்த ஊர் ஐதராபாத், மாடலிங் துறையை சேர்ந்தவர்.தெலுங்கு பட இயக்குநர் சந்திர சித்தார்த்தா இயக்கிய ‘அந்தரி பந்துவாயா’ என்ற தெலுங்கு படத்தில், பிரியங்கா நல்காரி அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில், ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா 3’ படத்தில், அறிமுகமானார். 2018ம் ஆண்டில், ரோஜா சீரியலில் ‘ரோஜா’ என்ற கேரக்டரில் நடித்தார். இதில் எல்லாம் நடிக்க வருவதற்கு முன்பே, ஈ டிவியில், தெலுங்கில் மேகமாலா எனற சீரியலில் ஆரம்பத்தில் நடித்தார். இப்போது, ஜீ தமிழில் சீதாராமன் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில், பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார்.
Priyanka Nalkariசீரியலில் நடித்து வரும் இவர், கடந்த மார்ச் மாதம் தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கோவிலில் நடந்த இவர்களது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.
பிரியங்கா நல்காரியின் செல்லப் பெயர் அம்லு. வயது 33 ஆன நிலையில், இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Priyanka Nalkariதமிழ் டிவி சீரியல்களில், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை, வரவேற்பே பெற்ற தொடர்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரோஜா, சந்திரலேகா, லட்சுமி ஸ்டோர்ஸ், பூவே உனக்காக,அபியும் நானும், கண்ணான கண்ணே, அன்பே வா, அருவி, செவ்வந்தி, மகராசி, தற்போது சீதா ராமன் தொடரில், சீதையாக நல்ல நல்ல கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் நல்ல அபிமானத்தை பெற்று வருகிறார்.
Priyanka Nalkariஇதுதவிர மங்கம்மா கேரி மணவரலு, சிரவண சமீரலு ஆகிய தெலுங்கு சீரியல்களிலும் பிரியங்கா நல்காரி நடித்து, தெலுங்கு ரசிகர்களிடமும் பெயர் பெற்று இருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக இவர், மூன்று முறை சூரிய குடும்பம் விருதுகளை பெற்றவர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். இப்போது, பனி சூழ்ந்த ஒரு இடத்தில், இலைகள் அற்ற மரக்கிளைகளின் கீழ் நின்று எடுத்த இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு. தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.