ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரகசியமாக தன்னுடைய காதலன்களை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மலேசியா முருகன் கோயிலில் இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது.
அதனுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தன்னுடைய காதலனை மலேசியா முருகன் கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாதத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவையா என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழிலும் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் குறிப்பாக தீயா வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பயணித்துக் கொண்டிருந்த இவர் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க அதிகரிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருந்த இவர் சமீபத்தில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
காரணம் இவர் நடித்து வந்த ரோஜா சீரியல் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் தன்னுடைய காதலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பிரியங்கா நல்காரி.
இந்நிலையில், மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் தான் இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை கரம் பிடித்திருக்கிறார். பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் சிக்கல்களை தாண்டி இந்த திருமணத்தை செய்திருக்கிறேன் என்று தன்னுடைய பதிவை பகிர்ந்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.