நயன்தாரா குழந்தையின் ஆயாவுக்கும் இவங்க தான் செலவு பண்ணனும்.. குண்டை தூக்கி போட்ட பிரபலம்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியை பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து பாலிவுட் திரை உலக்கிலும் தடம் பதித்த இவர் தற்போது அங்கும் வெற்றி நடை போட்டு வருகிறார்.

நடிகை நயன்தாரா..

தமிழ் திரை உலகில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

ஒவ்வொரு படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு வகையான கிசுகிசுகளுக்கு உள்ளானார். அந்த வகையில் நடிகர் சிம்புவோடு கிசுகிசுக்கப்பட்ட இவர் இதனை அடுத்து பிரபுதேவா என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக மாறிய இவர் பற்றி சில விஷயங்களை மூத்த பத்திரிகையாளரான அந்தணன் மற்றும் பிஸ்மி கூறிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நயன் குழந்தையின் ஆயாவுக்கு இவங்க தான் செலவு பண்ணனும்..

தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் தனக்காக வேலை செய்து வரும் துணை ஆட்களுக்கு சம்பளம் தர மாட்டாராம். அவர் எந்த படத்தில் கமிட் ஆகி நடிக்கிறாரோ அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் அவர்களுக்கும் சம்பளம் தருவார்களாம்.

மேலும் தற்போது படப்பிடிப்பிற்கு நயந்தாரா வரும் போது தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருகிறார். அப்போது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் தருவாராம். இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதை அடுத்து தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனையை பாரடா என்று பலரும் தலையில் கையை வைத்துக் கொண்டு இருப்பதோடு தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு தான் இந்த நிலைமை என்பதை ஓபன் ஆக கூறி இருக்கிறார்கள்.

குண்டைத் தூக்கிப் போட்ட பிரபலம்..

இதற்குக் காரணம் மலையாள திரைப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சம்பளம் பேசிவிட்டு அக்ரீமெண்ட் போட்டு விடுவார்கள். அந்த நடிகர் நடிகைகள் தான் அழைத்துவரும் துணை ஆட்களுக்கு செலவு செய்வார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும் தான் இப்படி தயாரிப்பாளர்களின் தலையில் துண்டை போடுகிறார்கள்.

இப்படிப்பட்ட யாரும் அறியாத விஷயத்தை மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி மற்றும் அந்தணன் கூறியிருப்பதை அடுத்து இந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் காட்டு தீ போல பரவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவை போலவே கங்கனா ராணவத் இது போலத் தான் நடிக்க வந்த போது கண்டிஷன் போட்டு தன்னோடு வந்த துணை ஆட்களுக்கு தயாரிப்பாளரை செலவு செய்ய வைத்திருக்கிறார் இந்த லிஸ்டில் விஷ்ணு விஷாலும் இணைந்து இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …