நம்பிக்கை வீண் போகவில்லை… PS 1 ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் கல்லா கட்டுது!

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்ற வரலாற்று காவியமான PS 1 பொன்னியின் செல்வனில் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

 இந்த படத்தில் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி திரிஷா ஐஸ்வர்யாராய் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கான இசையை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அமைத்துள்ளார். மணிரத்னத்தின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த படமானது இரண்டு பாகங்களாக வெளிவரக்கூடிய சூழ்நிலையில் பகுதி 1 க்கு படத்திற்கான முன்பதிவு தற்போது சில தியேட்டர்களில் துவங்கியுள்ளது.

 ஏற்கனவே அரசு நிர்ணயித்த விலையில் தான் இந்த டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்று உறுதியாக மணிரத்தினம் கூறியுள்ள நிலையில்  கடந்த சனிக்கிழமை  இரவு முதல் தொடங்கிய முன்பதிவில் சுமார் 275 தியேட்டர்களில் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் சுமார் 4.5 கோடி வசூல் ஆகி இருப்பதாகவும் இனி வரும் நாட்களில் இந்த முன்பதிவு ஆன்லைனில் தொடர்ந்து நடந்தால் மேலும் பல ரூபாய்களுக்கு  டிக்கெட்டுகள் விற்கப்படும் என தெரியவந்துள்ளது.

கடந்த 70 ஆண்டு தமிழ் திரையுலகின் கனவை நினைவாக்க மணிரத்தினத்தின் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிவதோடு மிகச்சிறந்த பான் இந்தியா படத்திற்கு  சிறந்த உதாரணமாகத் திகழும் என்று அனைத்து தரப்பிலிருந்தும் பேச்சுக்கள் வந்துள்ளது.

எனவே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த திரைப் படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக ஏ ஆர் ரகுமான் கூறிய கருத்து உள்ளது. அவர் இந்த படத்தை பார்த்த பின்பு எந்த வேறு மொழி படங்களையும் பார்ப்பதை நிறுத்தி விட்டார் என்று கூறியது தான் அது.

 எனவே மக்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு தற்போது ஆண்களின் புக் செய்து வருகிறார்கள் இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இதன் விற்பனை எந்த அளவுக்கு உயரும் என்பதை வரக்கூடிய நாட்களில் நாம் பார்க்கலாம்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …