தொடர்ந்து கிளம்பும் வதந்தி…! குழப்பத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்…!

தற்போது வெளியாகி அனைத்து வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

இந்த நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவரும் படத்தைப் பார்த்து படம் சூப்பர் என்று தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இருந்தும் ஒரு தரப்பினர் படம் சுமார் தான் என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஐந்து பாகங்களாக உள்ள பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகங்களாக குறைத்து திரைப்படமாக எடுத்துள்ளார்.

இத்திரைப்படம் சோழ மன்னர்களின் ஆட்சி முறையை பிரதிபலிப்பதாகவும் அவர்களது வாழ்க்கை முறையை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.இத்திரைப்படம் குறைந்த நாட்களில் 100 கோடியை வசூல் செய்த திரைப்படம் என்னும் சாதனை படைத்துள்ளது.

இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த கதாபாத்திரம் நந்தினி ஆகும். நந்தினி கதாபாத்திரம் சோழர்களைப் பழிவாங்க 74 வயதான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு சோழர்களுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபடுகிறார்.ஆதித்த கரிகாலன் காதல் கதை தெரிந்ததும் அரண்மனையை விட்டு வெளியேறுகிறார் நந்தினி.

அவர் எங்கு சென்றார் என்பது தெரியாத நிலையில் குடிசையில் பாண்டிய மன்னனுடன் இருப்பது போன்ற காட்சிகள் இவர் மீது சந்தேகத்தை கிளப்புகிறது.

அதுபோலவே நந்தினி சோழகுலப்பின் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக பாண்டிய நாட்டுச் சின்னமான மீன் சின்னம் உள்ள வாளை கையில் ஏந்தி அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

 அதுபோலவே சோழர் நாட்டு இளவரசியான குந்தவையும் சோழர் நாட்டை சேர்ந்தவர் அல்ல என்ற செய்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள்.

ஏனென்றால் குந்தவையாக நடித்த திரிஷா அவர்கள் மீன் சின்னத்தை தனது உடலில் டேட்டுவாக போட்டுள்ளதை காரணம்.

இதைக் குறித்து மீனை தனது உடலில் டேட்டுவாக போட்டு உள்ளதால் குந்தவை சோழ நாட்டுப் பெண் இல்லை என்று கிண்டலடித்து வருகின்றனர்.தற்போது நெட்டிசன்கள் உருவாக்கிய இந்த மீன் ட்ரண்டாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …