கோலாகலமாக நடந்த பொன்னியின் செல்வன் 1 சக்சஸ் மீட்…!

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாள்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் சுமார் 500 கோடி வசூலை எட்டியுள்ளது.

 இதனை அடுத்து இதற்கான நன்றியை தெரிவிக்கும் வண்ணமாக கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது.

இந்த சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்தினம், நடிகர்கள் விக்ரம்,  ஜெயம் ரவி பார்த்திபன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

 மேலும் இந்த படத்தில் கதாநாயகிகளாக பணியாற்றிய ஐஸ்வர்யா ராய்,திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற கதாபாத் போன்ற கதாநாயகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

 ஆனால் அன்று இரவில் நடந்த மற்றொரு பார்ட்டியில் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் குறிப்பாக ஐஸ்வர்யா ராய் தனது கணவரான அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோரோடு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.

 மேலும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபு அவரது மகன் விக்ரம் பிரபு ஜெயராம் ரகுராம் பார்த்திபன் படத்தில் இளவரசிகளாக நடித்த திரிசா சோபிதா சீனியர் நடிகையான ஜெயசித்ரா ஒலிப்பதிவாளரான ரவிவர்மன், நடன இயக்குனர் பிருந்தா, கலை இயக்குனர் தோட்டா தரணி உள்ளிட்டோர் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், குஷ்பூ, லிசி உள்ளிட்டோரும் மணிரத்தினம், சுகாசினி ஆகியோருக்கு நெருக்கமான சினி வட்டார பிரபலங்களும் பங்கேற்றனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இந்த சக்சஸ் மீட் பார்ட்டி  நடந்து முடிந்துள்ளது. மேலும் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …