போர்வைக்குள் வேலைக்கார பொண்ணு செய்த வேலை.. வீட்டை விட்டு வெளியேற்றிய ராதிகா..!

தமிழ் சினிமாவில் ராதிகாவுக்கு என ஒரு தனியிடம் உண்டு. மிக நல்ல நடிகையாக பல படங்களில் தன்னை நிரூபித்தவர். கிழக்குச்சீமையிலே படத்தில் விஜயகுமாரின் தங்கச்சியாக வாழ்ந்திருப்பார்.

சினிமாவில் மட்டுமின்றி சீரியலிலும் அவர் பல உச்சங்களை தொட்டவர். சித்தி, வாணி ராணி, அண்ணாமலை போன்ற பல சீரியல்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி தனது ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை, சீரியல்களை தயாரித்திருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர், நடிகர் சரத்குமாரின் மனைவி, நடிகவேள் எம்ஆர் ராதா மகள், நடிகர் ராதாரவியின் தங்கை, நடிகை நிரோஷாவின் அக்கா என்ற பல அடையாளங்கள் இவருக்கு உண்டு.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது வீட்டில் நடந்த ஒரு விஷயம் குறித்து நடிகை ராதிகா வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, என் வீட்டில் 18 வயதான ஒரு சின்ன பொண்ணு வேலை செய்து கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த பெண் செய்து கொண்டிருந்த வேலையை பார்த்து இனிமேல் வயதில் சின்ன பொண்ணுகளை வேலைக்கு வைக்க கூடாது அப்படியே வைத்தாலும் வீட்டில் தங்க வைக்க கூடாது என்று முடிவெடுத்தேன்

ஒரு நாள் போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளே செல்போனில் யாருடனோ சத்தமின்றி பேசிக் கொண்டிருந்தாள்.

ஒருவேளை நாளை ஏதாவது நடந்து விட்டால் நம்முடைய பெயர் கெட்டுவிடும் என்பதால் சின்ன பெண்களை வீட்டில் வேலைக்கு வைப்பதை நிறுத்தி விட்டேன் என கூறி இருக்கிறார் நடிகை ராதிகா.

போர்வைக்குள் வேலைக்கார பெண் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததால், அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார் ராதிகா. இது ஒரு குடும்ப பொறுப்புள்ள பெண்ணாக ராதிகா எடுத்த ஒரு பாதுகாப்பான முடிவாகவே தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *