ஒரு நிமிஷம் சன்னிலியோன்-னு நெனச்சிட்டோம்..! – இதுவரை இல்லாத கவர்ச்சியில் ரச்சிதா மகாலட்சுமி..!

யாருடைய கருத்தும் உங்களுடைய பில்-களுக்கு காசு கொடுக்கப்போவதில்லை என்று கூறி கருப்பு நிற உடையில் நச்சென சில புகைப்படங்கள் பதிவு செய்துள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi).

சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் ரச்சிதா நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் சொல்வதுண்டு.

பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தார். அதன்பிறகு, சினிமா துறையில் ஆர்வம் காட்டினார். அதனால் சில படங்களில் அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், பெயர் சொல்லும்படியான கேரக்டர்கள், ரச்சிதாவுக்கு அமையவில்லை.. அதனால், முன்னணி நடிகையர் வரிசைக்கு ரச்சிதாவால், முன்னேறி வர முடியவில்லை.

Rachitha Mahalakshmi

பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது குடும்பப் பாங்கான தோற்றம், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற முடியாமல் தடுத்துவிட்டது.

Rachitha Mahalakshmi

இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இவரது கணவர் பெயர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டனர்.

Rachitha Mahalakshmi

நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நடித்த போது, ஏற்பட்ட மனக்கசப்பால், இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது, தனது பெற்றோருடன் ரச்சிதா வசித்து வருகிறார். மீண்டும் இவர் தனது கணவருடன் சேர்ந்துவிடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், ரச்சிதாவை பொருத்தவரை இனி மொரட்டு சிங்கிள் ஆக வாழும் முடிவை அவர் எடுத்திருப்பதாகவே தெரிகிறது.

சினிமா படங்கள், டிவி சீரியல்களை காட்டிலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம், இன்னும் பலதரப்பு மக்களிடமும் ரச்சிதா அறிமுகம் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில், சீரியல் பார்க்காத பலரும், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களாக உள்ளனர்.

Rachitha Mahalakshmi

அதனால், ரச்சிதாவின் அழகை பார்த்து, அசந்துபோன பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும், இப்போது ரச்சிதாவின் ரசிகர்களாகி விட்டனர்.சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

ஆனால் சேலையாக இருந்தாலும், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும், பார்த்தவுடன் வியக்கும்படி அசத்தலான அழகில் அந்த புகைப்படங்களில் இருப்பாரே தவிர, கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசம் ததும்பிய அல்லது விரசம் நிறைந்த படங்களை, ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்தது இல்லை.

Rachitha Mahalakshmi

எனினும், அவரது அழகிய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அசந்து போய் தங்களது லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்., என்ன அழகு போங்க, கொன்னுட்டீங்க என்றும் கமெண்ட் பாக்சில் பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *