நடிகை ரக்சிதா மகாலட்சுமி பிரபலமான சீரியல் நடிகை. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் அடையாளமாக சொல்வதுண்டு. மாடலிங். பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
Rachitha Mahalakshmiபிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
மிக அழகான முக வெட்டும், அழகிய உடல்வாகும், சிறந்த நடிப்பாற்றலும் கொண்ட ரக்சிதாவுக்கு பட வாய்ப்புகள் ஏனோ பெரிய அளவில் வரவில்லை என்றாலும், சின்னத்திரையை பொருத்த வரை அவர் கதாநாயகிதான், பிஸி ஆன நடிகையாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Rachitha Mahalakshmiஎனவே, ஒரு ஆற்றல் மிகுந்த அழகான நடிகையை, தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினாலும், சின்னத்திரை உலகம் அவரை, கையில் வைத்து தாங்குகிறது.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டார். நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நடித்த போது, இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால், இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Rachitha Mahalakshmiசினிமா படங்கள், டிவி சீரியல்களை காட்டிலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற வகையில், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார் ரக்சிதா. பெண் போட்டியாளர்களில் டாப் அழகியாக, பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தார்.
பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டாலும், வீட்டுக்குள் நடந்த சண்டை சச்சரவுகளில் சிக்கிக்கொள்ளாமல் அமைதி காத்தார். இதை, சக போட்டியாளர்களே, அவரை கிண்டல் செய்தனர்.
Rachitha Mahalakshmiஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர், இவர் மீது காதல் கொண்டு பின்னாலேயே சுற்றித் திரிந்தார். அவரை காதலிப்பதாகவும் ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார். ஆனால், ரக்ஷிதா அசைந்து கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில், அவர் கதறி கதறி அழுததைப் பார்த்து ஆறுதல் சொன்னார் ரக்சிதா. இதுவெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வைரலாக பரவியது.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
ரக்சிதா, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் தற்போது டீசர்ட் சகிதமாக க்ளோஸ்-அப் ஷாட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
Rachitha Mahalakshmiஇதனை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு வயசானலும் அழகும், ஸ்டைலும் குறையல என படையப்பா பட வசனத்தை கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த ரச்சிதா மகாலட்சுமி என்னது எனக்கு வயசாகிடுச்சா..? என்று கேட்பது போல எமோஜி ஒன்றை பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.